50 பேர் கொண்ட குழு ஜனாதிபதி தலைமையில் ஈரான் பயணமாகவுள்ளது
October 15, 2012 Leave a comment
ஈரானில் ஓகஸ்ட் 30, 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அணிசேரா அமைப்பின் 16 ஆவது உச்சிமாநாட்டுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஈரான் செல்லவுள்ளார். ஜனாதிபதி தலைமையில் 50 பேர் கொண்ட குழுவொன்று ஈரான் செல்லவுள்ளது. அமைச்சர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெறவுள்ளதாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச் சேவைக்கு, கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் கியோமார்ஸ் காஸிமி தெரிவித்துள்ளார். 120 நாடுகள் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டிற்கிடையில் இலங்கை, ஈரானிய தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவாரத்தையும் நடைபெறவுள்ளதாக காஸிமி கூறினார்.